சினிமா செய்திகள்

36 ஆண்டுகளாகத் தேடப்படும் குற்றவாளி… உண்மைக் கதையில் மிரட்ட வரும் துல்கர்!

Published

on

கேரளாவில் நடந்த ஒரு உண்மை க்ரைம் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என அகில இந்திய வெளியீட்டுக்குத் தயாராகி வரும் படம் க்ருப்.

க்ருப் படத்தில் நாயகனாக நடிகர் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். கேரளாவில் கடந்த 1984-ம் ஆண்டு சுகுமாரா க்ருப் என்பவர் தனக்கான இன்சூரன்ஸ் பணத்தைக் கொள்ளை அடிக்க தனது மரணத்தை போலியாக நிகழ்த்தி உள்ளார். தனக்கு பதிலாக தன்னைப் போலவே இருக்கும் சாக்கோஸ் என்ற நபரை எறித்துக் கொலை செய்துள்ளார். போலீஸிடம் அகப்படாமல் நாட்டை விட்டே தப்பி ஓடிவிட்டார் க்ரூப்.

இந்தியாவிலேயே நீண்ட ஆண்டுகளாகத் தேடப்படும் குற்றவாளி ஆக சுகுமாரா க்ரூப் உள்ளார். இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத க்ரூப் கதையை க்ரூப் படமாக துல்கர் நடிப்பில் எடுத்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version