தமிழ்நாடு
பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: எந்தெந்த மாவட்டங்கள், முழு விபரங்கள்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுவரை வெளிவந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் 5 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அதேபோல் தேனி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சற்றுமுன் வெளியான தகவலின்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.