இந்தியா

ஒமிக்ரான் பரவல் எதிரொலி: மும்பையில் 144 தடை உத்தரவு!

Published

on

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மும்பையில் அதிகரித்து வருவதையடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஒமிக்ரான் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மும்பையில் இன்றும் நாளையும் அதாவது டிசம்பர் 11 மற்றும் டிசம்பர் 11 ஆகிய இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஒரு சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தடை உத்தரவையும் மீறி ஒமிக்ரான் வைரஸ் பரவினால் அடுத்த கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மும்பை மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version