தமிழ்நாடு

7 மாவட்டங்களில் நாளை பள்ளிகள், கல்லூர்கள் விடுமுறை!

Published

on

கனமழை காரணமாக நாளை 7 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல பள்ளிகளில் தீபாவளிக்கு இன்னும் திறக்கவில்லை என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று 20 மாவட்டங்களுக்கு மேலாக கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் சென்னை, திருப்பத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்ற அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஐந்து மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்ற அறிவிப்பு வெளி வந்துள்ளதால் மொத்தம் 7 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையின் அளவை பொறுத்து மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version