தமிழ்நாடு

கனமழை எதிரொலியால் பள்ளிகள் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு!

Published

on

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது என்பதை பார்த்தோம்.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நெருங்கி வருவதை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வழக்கம்போல் பள்ளிகள் கல்லூரிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version