தமிழ்நாடு

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!

Published

on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி ஆரம்பித்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்து வருகிறது என்பதும் அதனால் இன்று காலை சென்னையில் உள்ள பல சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி வருகிறது பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் 6 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என சற்றுமுன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்

திருவாரூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை என்றும் இந்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்க இருக்கும் நிலையில் அந்த மாணவர்களும் இன்று பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 6 மாவட்டங்கள் தவிர சென்னை உள்பட மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையடுத்து மேலும் சில மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என்ற அறிவிப்பு இன்னும் ஒரு சில நிமிடங்களில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version