இந்தியா

பணிப்பெண்ணுடன் குடிபோதையில் தகராறு செய்த பயணி: அவசரமாக இறக்கப்பட்ட விமானம்

Published

on

விமான பணிப்பெண்ணுடன் பயணி ஒருவர் குடிபோதையில் தகராறு செய்வதை அடுத்து அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

பெங்களூரில் இருந்து கிளம்பிய விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த பயணி ஒருவர் குடிபோதையில் அங்கிருந்த விமான பணிப் பெண்ணிடம் தகராறு செய்தார்.

இதனை அடுத்து விமான பணிப்பெண்கள் மற்றும் சக பயணிகள் அந்த நபரை சமாதானப் படுத்தியும் அவர் தொடர்ந்து அத்து மீறி செயல்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து விமானம் மீண்டும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர்களிடம் அளித்த புகாரின் அடிப்படையில் குடிபோதையில் இருந்த ஆசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். விமானப் பணிப்பெண்ணிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது .

கைது செய்யப்பட்ட நபர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து விமானம் மீண்டும் கிளம்பியது.

 

Trending

Exit mobile version