இந்தியா

மட்டன் சமைக்காத மனைவி.. 100-ல் புகார் அளித்த கணவன்!

Published

on

தெலுங்கானாவில் ஹோலி பண்டிகையின் போது மனைவி மட்டன் சமைத்துத் தரவில்லை என காவல் துறை அவசர அழைப்பு எண்ணிற்கு 6 முறை அழைத்து புகார் அளித்துள்ளார் போதை ஆசாமி ஒருவர்.

தெலுங்கானா மாநிலம், கனங்கள் அருகில் உள்ள செர்லா கவுராராம் பகுதியைச் சேர்ந்தார் நவீன். ஹோலி பண்டிகையன்று அளவுக்கு அதிகமாக மது அருந்திய நவீன், தனது மனைவியிடம் மட்டன் சமைத்துத் தரும் படி கேட்டுள்ளார்.

ஆனால் அவர் மனைவி அதற்கு மறுப்பு தெரிவிக்க, வெள்ளிக்கிழமை இரவு 6 முறை காவல் துறை அவசர எண்ணை அழைத்து புகார் அளித்துள்ளார்.

முதலில் அதை தவிர்த்த காவல் துறையினர், தொடர்ந்து அழைப்புகள் வந்ததை அடுத்து அடுத்த நாள் காலை அவரது வீட்டிற்குச் சென்று நவீனை கைது செய்தனர்.

மேலும் பொது இடத்தில் தொல்லை கொடுத்ததற்காக ஐபிசி பிரிவு 290 கீழும், குடித்துவிட்டு பொது இடத்தில் தவறாக நடந்துகொள்வது என்ற காரணத்துக்காக 510 பிரீன் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுபோன்று காவல் துறை அவசர அழைப்பு எண்ணைத் தவறாக அழைப்பதால், முக்கிய அவசர அழைப்புகளைக் காவல் துறையினரால் எடுக்க முடியாமல் போய்விடும். எனவே பொதுமக்கள் இது போன்ற அவசர பிரிவு எண்களைப் பொதுமக்கள் தேவையில்லாமல் அழைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

Trending

Exit mobile version