இந்தியா
மும்பை போதை பெண் ஆர்டர் செய்த பிரியாணி ரூ.2500ஆ? என்ன நடந்த்து?
![biriyani1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/biriyani1.jpg)
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் போதையில் பிரியாணி ஆர்டர் செய்து 2500 ரூபாய் செலுத்தியது குறித்த பதிவை எடுவீட்டரில் பதிவு செய்துள்ளார்.
மும்பை சேர்ந்த பெண் ஒருவர் தான் மது கொடுத்துவிட்டு பிரியாணி சாப்பிட வேண்டும் என்று விரும்பியதாகவும் இதனை அடுத்து ஆன்லைன் மூலம் ஜொமேட்டோவில் பிரியாணி ஆர்டர் செய்ததாகவும் கூறினார்.
இந்த நிலையில் தான் ஆட செய்த பிரியாணிக்கு 2500 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டதாக வெளிவந்த குறுஞ்செய்தியை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அதன் பின்னர் தான் தான் செய்த தவறு தனக்கு புரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது மும்பையில் உள்ள உணவகத்தில் அவர் பிரியாணி ஆர்டர் செய்வதற்கு பதிலாக பெங்களூரில் உள்ள உணவகத்திற்கு ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டரையும் ஏற்றுக்கொண்ட ஜொமேட்டோ நிறுவனம் அவருடைய அக்கவுண்டில் இருந்து 2500 ரூபாய் கழித்துக்கொண்டது.
ஜொமேட்டோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள எந்த உணவகத்தில் இருந்தும் ஆர்டர் செய்யலாம் என்றும் உணவுகள் டெலிவரி செய்ய ஒரு சில நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் பதப்படுத்தப்பட்டு டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தது.
இதனை அடுத்து பாரம்பரியமான உணவுகள் எங்கிருந்தாலும் அதனை வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மும்பையில் இருந்து அவர் பெங்களூரு ரெஸ்டாரண்ட் ஒன்றில் ஆர்டர் செய்த பிரியாணி இரண்டு நாள் கழித்து வந்ததாகவும் அந்த புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டரில் காமெடியாக பதிவு செய்திருந்தார். இந்த பதிவை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து தங்கள் பாணியில் காமெடியான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.