தமிழ்நாடு
ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் கேன்சரை உருவாக்குகிறதா? பரபரப்பு புகார்
சென்னை: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பல கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்களை இவர்கள் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள்.
பவுடர், சோப், ஷாம்பு என்று மிக அத்தியாவசியமான பொருட்களை இவர்கள் உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களின் நிறுவனத்திற்கு எதிராக மிகப்பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர் உள்ளிட்ட பொருட்களில் கேன்சரை உருவாக்கும் மூலக்கூறுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில ஆங்கில ஊடகங்கள் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கட்டுரைகளை வெளியிட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சிலரின் பேட்டியும் அந்த கட்டுரைகளில் இருந்தது.