உலகம்
உலகப்புகழ் பெற்ற விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்: 3 எரிபொருள் டேங்கர் சேதம்!
![drone attack - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/drone-attack.jpg)
உலகின் பிஸியான விமான நிலையங்களில் ஒன்றில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அடுத்து மூன்று எரிபொருள் டேங்கர்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகிலேயே மிகவும் பிஸியாக இருக்கும் விமான நிலையங்களில் ஒன்று ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில் உள்ள விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமான நிலையம் அருகே புதிதாக இன்னொரு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது என்பதும் இதன் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தின் மீது திடீரென ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதல் மூலம் விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 3 எரிபொருள்கள் சேதமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன ]இருப்பினும் எந்த விதமான உயிர் சேதமும் இல்லை என்று கூறப்படுகிறது.
ட்ரோன் தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்று உள்ளதாகவும் இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.