ஆட்டோமொபைல்
காலாவதியான ஓட்டுநர் உரிமம், வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
கொரோனா ஊரடங்கு காலத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த காலக்கெடு நீட்டிப்பின் படி மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன சட்ட 189 கீழ், பிப்ரவரி 1-ம் தேதியுடன் காலாவதியான வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகன சான்றிதழ் ஆகியவை டிசம்பர் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும்.
மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறையின் இந்த முடிவால் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் பெரும் அளவில் பயனடைவார்கள்.