தமிழ்நாடு
தீபாவிடம் விருப்ப மனு கொடுத்தார் டிரைவர் ராஜா!
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிட விரும்புவதாக தீபாவின் நண்பர் டிரைவர் ராஜா பொதுச்செயலாளர் ஜெ.தீபாவிடம் விருப்ப மனு அளித்துள்ளார்.
மக்களவை தேர்தலை தனித்து சந்திக்க முடியாமல் தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனால் தொண்டர்களின் பேராதரவால் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இந்த தேர்தலை 40 தொகுதிகளிலும் தனித்து சந்திக்கும் என அதிரடியாக அறிவித்து மற்ற அரசியல் கட்சியினரை கலங்க வைத்துள்ளார் ஜெ.தீபா.
இதனையடுத்து மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பு மனு அளிக்கலாம் என அறிவித்தார் இளைய புரட்சித் தலைவி ஜெ.தீபா. இதனையடுத்து முதல் ஆளாக தனக்கு வாய்ப்பு வழங்குமாறு டிரைவர் ராஜா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபாவிடம் விருப்ப மனு அளித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் தீபா, அவரது கணவர் மாதவன், டிரைவர் ராஜா இடையே ஏற்பட்ட சண்டையில் டிரைவர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிரைவர் ராஜா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.