தமிழ்நாடு
‘சரக்கு அடிச்சா கொரோனா பறந்துடும்..’- உளறும் குடிமகன்கள்; வைரல் வீடியோ
நேற்று முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பல கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கின் போது மளிகை கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் மதியம் 12 மணி வரையே இந்தக் கடைகள் திறந்திருக்க அனுமதி உண்டு.
இந்தக் காலக்கட்டத்தில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டு வரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
vasaname purilaye da???? pic.twitter.com/IeFOZhmOJp
— Sadhvika????????♀️ (@sadist_paapa) May 11, 2021
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. இந்த எண்ணிக்கையை குறைக்கவே மாநிலம் தழுவிய அளவு ஊரடங்கு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் முழு நாளும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதியளித்தது. அந்த இரண்டு நாட்களில் மட்டும் மதுபானங்களின் விற்பனை சுமார் 1000 கோடி ரூபாயைத் தொட்டது.
அந்த நேரத்தில் சில ‘குடிமகன்களிடம்’ எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், இருவர் பேசுவது தற்போது வைரலாகி வருகிறது.