சினிமா செய்திகள்

’சார்பாட்டா பரம்பரை’ படத்தை விமர்சனம் செய்த ‘திரெளபதி’ இயக்குனர்: என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்

Published

on

இயக்குனர்கள் பா ரஞ்சித் மற்றும் மோகன்ஜி ஆகிய இருவரும் கொள்கை அளவில் முற்றிலும் வித்தியாசமானவர்கள் என்பதும் இவர்கள் இருவருடைய திரைப்படங்கள் வரும் போது ரசிகர்கள் மோதல் கருத்துக்களை தெரிவித்து வருவது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் இன்று அமேசான் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த படம் தற்போது விமர்சன ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் அனைவரும் இந்த படத்தை பாராட்டி போற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து ‘திரெளபதி’ இயக்குனர் மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம், பா ரஞ்சித்தின் மிகச்சிறந்த முயற்சி என்றும் ‘நான் கடவுள்’ படத்திற்கு பின்னர் ஆர்யாவின் சிறந்த நடிப்பு என்றும், பசுபதி, ஜான் விஜய் உள்ளிட்ட அனைவருமே மிக சிறப்பாக நடித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனர் ரஞ்சித் அவர்களின் கடினமான உழைப்பு படத்தில் தெரிகிறது என்றும், ஒளிப்பதிவு, கலை இயக்கம் ஆகிய பணிகள் மிகவும் டாப் என்றும், மற்றொரு ஹிட் படத்தை படக்குழுவினர் கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

’சார்பாட்டா பரம்பரையில் திரைப்படத்திற்கு இயக்குனர் மோகன் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்த போதிலும் நெகட்டிவ் கமெண்ட்கள் அவரது டுவீட்டிற்கு பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version