சினிமா செய்திகள்

டபுள் ரஜினி – மாஸ், க்ளாஸ் ட்ரீட் தரப்போகும் முருகதாஸ்!

Published

on

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலா, 2.0, பேட்ட என அடுத்தடுத்து படங்களின் வெற்றியை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்க இருக்கிறார் ரஜினி. முதலில் இந்த படத்திற்கு நாற்காலி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், ரஜினி இதில் தமிழ்நாட்டு முதலமைச்சராக நடிக்க உள்ளார் என்ற வதந்திகள் பரவின. ஆனால், ஏ.ஆர். முருகதாஸ் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் நயந்தாரா கதாநாயகியாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும், மற்ற நடிகர்களை தேர்வு செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது.

இதுவும் அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்று பேசப்பட்டிருந்தது. ஆனால் இது ஒரு போலீஸ் கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் போலீஸ், சமூக சீர்திருத்த போராளி என இரு வேடங்களில் ரஜினி நடிக்க இருக்கிறார். போலீஸ் கதையாக இருந்தாலும் இந்த படம் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசும் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version