சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று டபுள் எவிக்சன்: எதிர்பாராத திருப்பம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இன்று இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்ய உள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வைல்ட்கார்டு போட்டியாளர்களை சேர்த்து மொத்தம் 20 போட்டியாளர்கள் விளையாடினார்கள் என்பதும் அவர்களில் இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இருக்கும் 10 போட்டியாளர்களில் 6 போட்டியாளர்கள் நாமினேஷனில் சிக்கியுள்ள நிலையில் அவர்களில் இரண்டு போட்டியாளர்கள் இன்று எலிமினேட் செய்ய உள்ளார்கள் என செய்திகள் வெளியாகிஉள்ளது.
நாமினேஷன் செய்யப்பட்டுள்ள 6 போட்டிகளில் அக்சரா, நிரூப் மற்றும் வருண் ஆகிய 3 போட்டியாளர்கள் மிக குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் இவர்களில் அக்சரா மற்றும் வருண் ஆகிய இருவரும் இன்று வெளியேற்றப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு சில வாரங்களே இருப்பதால் அடுத்தடுத்து வரும் வாரங்களில் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.