டிவி

யாரைக் காப்பற்ற என் மகனை கைது செய்தார்கள்..? ஹேம்நாத் தந்தை பரபரப்பு பேட்டி!

Published

on

சின்னதிரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது காதல் கணவர் ஹேம்நாத் நேற்று கைது செய்யப்பட்டார்.

வழக்கின் விசாரணையில் இன்று பங்கேற்ற ஹேம்நாத் தந்தை, “கடந்த 6 நாட்களாகக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நானும் இன்று ஆர்டிஓ மேடம் விசாரணையில் பங்கேற்றேன்.

நியாயமாகப் பார்த்தால் இன்று தனது மகனும் விசாரணையில் பங்குபெற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் இன்று வரவில்லை. நேற்று அவசரகதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்னவென்றும் என்ன நடக்கிறது என்றும் எனக்கு தெரியவில்லை. யாரைக் காப்பாற்றக் கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவில்லை” என கூறினார்.

வரதட்சணை கொடுமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, அப்படி நாங்கள் ஏதும் கேட்கவில்லை. அதை சித்ராவின் தந்தை ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளார் என்றார்.

இன்றைய விசாரணையில் எங்களது நியாயத்தைத் தெரிவித்துள்ளோம். காவல் துறையினரும் வரதட்சணை ஏதும் கேட்டீர்களா என்று கேட்டனர். அப்படி ஏதும் கேட்கவில்லை என்று தெரிவித்தாக கூறினார்.

சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் அளித்த மன அழுத்தமே காரணம் என்று, நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேற்றைய விசாரணையில் சித்ராவின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

seithichurul

Trending

Exit mobile version