உலகம்
ஈரான் மீது நடத்தவிருந்த தாக்குதலை ஒத்திவைத்தாரா டிரம்ப்!
ஈரான் இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஈரான் மீது பொருளாதாரத் தடையை வித்துள்ளது.
இதனால் ஈரான் மிகப் பெரிய பொருளாதாரத் தடையில் சிக்கித் தவித்து வருகிறது. அவ்வப்போது ஈரான் – அமெரிக்க கப்பல்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டும் வருகிறது.
இவற்றுக்கிடையில் ஈரானின் தெற்கு பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமான சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
அதற்கு டிரம்ப், “ஈரான் மிகப் பெரிய தவறை செய்துவிட்டது” என்று தெரிவித்திருந்தார். மேலும் ஈரான் மீது போர் தொடக்கத் தயாராகும்படியும் உத்தரவிட்டுள்ளார்.