இந்தியா

சென்னை நாய்கறி சர்ச்சையால் படுத்தது இறைச்சி விற்பனை.. எல்லாம் போச்சு!

Published

on

சென்னை: நாய்கறி பீதி காரணமாக சென்னையில் பிரியாணி விற்பனை பெரிய அளவில் சரிந்து இருக்கிறது.

கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட பார்சலில் 2000 கிலோ கறிகள் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. இவை நாய்கறி என்று கூறப்பட்டது.

ஆனால் இப்போது வரை இது நாய்கறிதான் என்று யாரும் உறுதியாக விளக்கமளிக்கவில்லை. ஆனால் இது மக்கள் மத்தியில் பெரிய பீதியை கிளப்பி உள்ளது.

இதனால் சென்னையில் கறி விற்பனை பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆடு, மாடு இரண்டின் விற்பனையும் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

seithichurul

Trending

Exit mobile version