செய்திகள்
பெண்ணின் கையை பிடித்து அலுவலகம் அழைத்து செல்லும் நாய்…வைரல் வீடியோ…
இந்த உலகிலேயே மனிதர்களிடம் அன்பாக பழகும் ஜீவன் நாய்தான். பாச உணர்ச்சி, நன்றி உணர்ச்சி இவற்றில் நாயை எந்த உயினமும் பீட் செய்ய முடியாது. பரபர உலகில் நாய்களை சிலரே நின்று கவனித்து அன்பு செலுத்துகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும்.
இந்நிலையில், நெகிழ்ச்சி தரும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது பெண் ஒருவர் தினமும் அலுவலகம் செல்லும் போது அவரின் அலுவலகத்தின் அருகில் இருக்கும் ஒரு நாய் மீது அன்பு செலுத்தியுள்ளார். இதன் காரணமாக அந்த நாயும் அவருடன் பாசத்துடன் பழகி வருகிறது. ஓவ்வொரு நாளும் அப்பெண் அலுவலகத்திற்கு வரும் போது அந்த நாய் அவரின் கையை வாயால் கடித்து அவரை அவரின் அறைக்கு அழைத்து சென்று விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அப்பெண், இந்த நாயின் செய்கையால் தினமும் டென்ஷன் இல்லாமல் என் அலுவலக பணிகளை செய்கிறேன் என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
https://www.youtube.com/watch?v=0yPic6a6kqA