Connect with us

தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மொபைல் உள்ளிட்ட சாதனங்கள் மூலமாக சிறிய திரையில் படிக்கும் மாணவர்களின் கண்பார்வை மோசமாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் உரிய வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மொபைல் போன்ற சிறிய திரையில் இளம் பருவத்தினர் அதிக நேரம் பார்க்கும்போது அவற்றில் இருந்து வெளியாகும் புளூலைட் குழந்தைகளின் விழித்திரையை நேரடியாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவற்றை தவிர்ப் பதற்காக முடிந்தவரையில் கைபேசியை தொலைக்காட்சியுடன் இணைந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கலாம் என்றும் அல்லது லேப்டாப் போன்ற பெரியதாக இருந்தால் நல்லது என மருத்துவர்கள் யோசனை தெரிவித்த்துள்ளனர்.

தொடர்ந்து திரையை பார்ப்பதால் குழந்தைகளின் பார்வை திறன் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல குழந்தைகள் அதிக நேரம் இயர்போன் பயன்படுத்துவதால் ஒற்றை தலைவலி, காதுகளில் இரைச்சல், காது கேளாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக கூறும் மருத்துவர்கள், தொடர்ந்து பல மணி நேரம் அதிக சப்தத்துடன் செல்போன் பயன்படுத்தினால் காது நரம்புகள் பலவீனமடைந்து கேட்கும் திறன் நாளடைவில் குறையும் என்றும் எச்சரிக்கின்றனர். இயர்போன்களை வைப்பதால் காற்று காதுகளின் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு காதில் பூஞ்சை தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க 60 சதவிகிதம் வரை ஒலி திறனை பயன்படுத்தலாம் எனவும் தொடர்ச்சியாக 45 நிமிடங்களுக்கு மேல் இயர்போன்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். அல்லது இயர்போன்களுக்கு பதிலாக பெரிய அளவிலான ஹெட்போனை பயன்படுத்தலாம் எனவும் அவை நல்ல தரமானதாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்கமுடியாதது என்றாலும் வளரும் இளம் தலைமுறையினரின் கண்கள், செவிகள் ஆகியவை மென்மையாக இருக்கும் என்பதனால் பெற்றோர்கள் மிகுந்த கவனத்தோடு அவற்றை கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!