தமிழ்நாடு

உயிர் காத்து உயிரிழந்த மருத்துவர்கள்… தமிழகத்தில்தான் அதிகம்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கைப் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்கள் உடல் அளவில் மட்டுமல்லாது மன அளவிலும் கடுமையாகப் பாதித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் தற்போதைய சூழலில் பலி எண்ணிக்கை குறைந்து உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒரு புறம் இருந்தாலும் கொரோனா பாதிப்பை விரட்ட லட்சக்கணக்கான மருத்துவர்கள் இதுவரையிலும் தினம் தினம் போராடி வருகின்றனர். அப்படி உயிர் காத்த மருத்துவர்களுள் அதே கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. இந்த வகையில் கொரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் எண்ணிக்கைப் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரையில் கொரோனாவுக்கு 62 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்.

அதேபோல் அடுத்தபடியாக கர்நாடகாவில் 42 மருத்துவர்களும் ஆந்திராவில் 41 மருத்துவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version