அழகு குறிப்பு
முகம் பளபளப்பாக இருக்க இதை செய்யுங்கள்!
தினமும் 2 முறையாவது முகம் கழுவும் வழக்கம் இல்லை என்றால் உங்கள் முகத்தை பாதுகாக்க உடனே அதை துவங்குங்கள். வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். வெந்நீர் உங்கள் சருமத்தை உளர் தன்மை ஆக்கும். உங்கள் சருமத்தின் நீர்த்தன்மையை பாதிக்கும் சோடா பயன்படுத்துவதை தவிர்க்கவும். புகைக்கும் பழக்கம் உள்கள் சருமம் மற்றும் கூந்தலை பாதிக்கும்.
சிறிதளவு பால், கால் ஸ்பூன் எலுமிச்சைசாறு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பேஸ்டாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். பப்பாளி துண்டுகள், கற்றாழை ஜெல், சிறிது பால், கால் ஸ்பூன் சர்க்கரை ஆகியவை கலந்த பேஸ்டை 10 நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்து கழுவவும்.
தோலில் எண்ணெய், இறந்த செல்கள், பாக்டீரியாக்கள், முகப்பருக்கள் ஆகியவற்றை நீக்க வேம்பை பயன்படுத்துவது நல்லது. வேம்பின் இலையை அரைத்து சோப் போல பயன்படுத்தலாம். வேம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தோலின் நுண்ணுயிற்களை அழித்து முகம் பொலிவாக இருக்கும். முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்கவும் உதவும். சுருக்கங்களை நீக்கவும் வேம்பில் சக்தி உள்ளது.
உருளைக்கிழங்கு சாறு எடுத்து உதடு மற்றும் கன்னத்தை சுற்றி தடவி வர கருமை நீங்க சிறந்தது. லெமன் ஜுஸ் & ரோஸ் வாட்டர் சேர்த்து தடவி 10 – 15 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ஒரு க்ரீன் டீ பேக் அல்லது க்ரீன் டீத்தூளை நீரில் கொதிக்கவிட்டு தூளை வடிகட்டவும். காட்டன் பஞ்சில் எடுத்து முகம் முழுவதும தடவ வேண்டும். அது முகத்தில் உலர உலரக் கறைந்தது 3 முறை தடவி உலர விட்டுக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகப்பராமதிப்புக்குச் சிறந்த க்ரீன் டீ சருமத்தை பளபளக்க உதவும். இது முகத்திற்குச் சிறந்த டோனிங்காக செயல்படும்.