இந்தியா

அவசர அவசரமாக பள்ளிகளை திறக்க வேண்டாம்: எய்ம்ஸ் பேராசிரியர் எச்சரிக்கை!

Published

on

பள்ளிகளை திறக்க வேண்டாம் என எய்ம்ஸ் பேராசிரியர் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகளில் 50 சதவீத மாணவர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளிவந்த நிலையில் அவசர அவசரமாக பள்ளிகளை திறக்க வேண்டாம் என எய்ம்ஸ் பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு அக்டோபரில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பள்ளிகளை திறப்பது சரியான நடவடிக்கை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன என்பதும் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எய்ம்ஸ் பேராசிரியரின் எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version