தமிழ்நாடு

பொது குழு கூட்டம் போன்று நடைபெற உள்ள திமுகவின் செயற்குழு கூட்டம்..!

Published

on

திமுக செயற்குழுக் கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10:30 மணியளவில் தொடங்க இருக்கின்றது. திமுகத் தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவது மட்டும் இல்லாமல் அடுத்தத் தலைவர் மற்றும் பொருளாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

பொதுவாகத் திமுகச் செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டத்திற்கு 2 பேர் என்று 130 நபர்களும், மாநில நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனச் சில நூறு பேர் தான் அழைக்கப்படுவார்கள்.

ஆனால் இந்த முறை மாவட்ட துணை செயலாளர்கள், கட்சியின் 19 அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், முன்னாள் உறுப்பினர்கள் எனச் சுமார் 1,000 நபர்களுக்கும் அதிகமாகக் கூடுதலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு நபர்கள் அழைக்கப்பட்டு இருப்பது நிச்சயம் தலைவர் யார் என்பதை முடிவு செய்யத் தான் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே இந்தக் கூட்டம் கிட்டத்தட்டச் செயற்குழு போன்று இல்லாமல் பொதுக் குழு கூட்டம் போன்று இருக்கும்.

Trending

Exit mobile version