தமிழ்நாடு

பிரச்சனை செய்த அழகிரி.. பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடும் திமுக செயற்குழு

Published

on

சென்னை: திமுக கட்சியில் அழகிரி புதிய பிரச்சனையை உருவாக்கி இருக்கும் நிலையில், நாளை திமுக செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது.

மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற மு.க அழகிரி திமுகவில் பெரிய புயலை கிளப்பி உள்ளார். திமுக கட்சியில் உள்ள தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று பேட்டி அளித்துள்ளார்.

பிரச்சனை செய்த அழகிரி

பிரச்சனை செய்த அழகிரி

கட்சியில் இருக்கும் சில நபர்கள் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். அதோடு மூன்று நாட்களில் முக்கியமான விஷயம் ஒன்றை அறிவிக்க போவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான் திமுக உறுப்பினர்கள் எல்லோரும் கூடும் செயற்குழு நாளை நடக்க உள்ளது. இதில் திமுக தலைவர் கருணாநிதியின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தப்படும்.

அதன்பின் அழகிரி விஷயம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதனால் இந்த கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version