தமிழ்நாடு
மரப்பலகையில் பொங்கல் அடுப்பு! ஸ்டாலினுக்குப் போட்டியாக உதயநிதியின் பலே ஐடியா!!
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மரப்பலகை மீது பொங்கல் அடுப்பு வைத்து போஸ் கொடுத்த போட்டோ வைரலாக பரவி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றார். அப்போது அடுப்பே பற்ற வைக்காமல், பொங்கல் பானைக்குள் கரண்டி விட்டு கிண்டுவது போல் போஸ் கொடுத்தார். அந்த போட்டோ வைரலாக பரவியது.
இந்த நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் மரப்பலகையில் பொங்கலிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு மரப்பலகை (பிளைவுட்) மீது செங்கல் அடுப்பு வைத்து, அதன் மீது பொங்கல் அடுப்பு வைக்கப்பட்டுள்ளது. சமத்துவ பொங்கலை கொண்டாடுவதாக நினைத்து உதயநிதி ஸ்டாலினும் போஸ் கொடுத்துள்ளார்.
மரப்பலகை மீது அடுப்பு வைத்தால் மரப்பலகை எரிந்து விடும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பொங்கல் அடுப்பு வைத்துள்ளார். அதற்கு உதயநிதி ஸ்டாலினும் போஸ் கொடுத்திருப்பது வேடிக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பாஜக சார்பில் நடத்திய சமத்துவ பொங்கலில் ஒரேயொரு பானையில் மட்டும் பொங்கல் வைத்து, மற்ற பானைகளில் பஞ்சு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.