தமிழ்நாடு
பூட்டிய அறையில் சிக்கிய எலி தான் பிரேமலதா: விளாசிய திமுக!
தேமுதிக மக்களவை தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதை திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் அம்பலப்படுத்தினார். இது அரசியல் அரங்கில் தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
தேமுதிகவின் இந்த மோசமான அரசியல் அனுகுமுறை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளாது. இதனையடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது திமுக தலைவர்களையும், செய்தியாளர்களையும் ஒருமையில் பேசி கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
இதனையடுத்து கடந்த சட்டசபை தேர்தலின் போது தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சந்திரசேகர் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் போசும் போது, பிரேமலதா தேமுதிகவை பணம் கொழிக்கும் கட்சியாக மாற்றிவிட்டார். பொதுக்கூட்டத்தில் பேசுவது போல பேசி அவர் பத்திரிக்கையாளர்களை அவமானப்படுத்தியுள்ளார்.
பிரேமலதா தேமுதிக கட்சியில் அடியெடுத்து வைத்தது முதல் பணம் கொழிக்கும் கட்சியாக அதனை மாற்றிவிட்டார். தற்போது பூட்டிய அறையில் சிக்கிய எலி போல பிரேமலதா விஜயகாந்த் விரக்தியில் இருக்கிறார். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் 45 நிமிடங்கள் அமர்ந்து பேசிவிட்டு தற்போது அதை மறுக்கிறார்கள். கருணாநிதியை சந்திக்க ஸ்டாலின் அனுமதி மறுத்ததாக திரும்ப, திரும்ப பொய் கூறி வருகின்றார் பிரேமலதா என விளாசியுள்ளார் திமுகவின் சந்திரகுமார்.