தமிழ்நாடு

ஜெயலலிதா மறைவுக்கு காரணம் பாமக தான்: திமுக பிரமுகர்கள் பேட்டி!

Published

on

வரும் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு பிரச்சனைகளை அதிமுக மற்றும் திமுக கையில் எடுத்துள்ள நிலையில் அவ்வாறு எடுத்துள்ள விஷயங்களில் ஒன்று ஜெயலலிதா மரணம். ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் திமுகதான் என முதல்வர் உட்பட அதிமுக அமைச்சர்கள் குற்றஞ்சாட்ட, அதற்கு திமுகவினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா மீது திமுக அழுத்தம் கொடுத்ததன் காரணமாக தான் அவர் மன உளைச்சல் காரணமாக இறந்தார் என்பட்ஜே அதிமுகவினர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் திமுக பிரமுகரான ஆர்எஸ் பாரதி மற்றும் என்.ஆர்.இளங்கோ இன்று செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து விளக்கமளித்தனர்.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் திமுக மேல்முறையீடு செய்யவில்லை என்றும், ஆனால் ஜெயலலிதா மீதான வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என கர்நாடக அரசுக்கு கோரிக்கை வைத்தது பாமக தான் என்றும் அதனால்தான் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் பாமக தான் என்றும் திடீர் திருப்பமாக ஒரு கருத்தைக் கூறினார்கள்.

மேலும் ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றும், அந்த பொய் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஜெயலலிதா மரணத்திற்கு திமுக காரணம் என அதிமுகவினர்களும், அதிமுக தான் காரணம் என திமுகவினர்களூம் கூறி வந்த நிலையில் திடீரென ஆர்எஸ் பாரதி மற்றும் என்ஆர் இளங்கோ, பாமக தான் காரணம் என்று கூறி இருப்பதற்கு என்ன அர்த்தம் என்பது புரியவில்லை என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version