தமிழ்நாடு

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்தநாளே.. தூத்துகுடியில் முக ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி!

Published

on

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் பிரச்சாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தையை ஒருபக்கம் தொடங்கியிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பிரச்சாரத்தையும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்து வரும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அந்நகர மக்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளார். அதாவது திமுக ஆட்சிக்கு ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த நாளே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்ற போது ஏற்பட்ட வன்முறை காரணமாக ஏராளமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், இந்த வழக்குகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பு அந்நகர மக்களை உற்சாகப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version