தமிழ்நாடு

முடிந்தால் அடித்துப்பார்: சவால்விட்டு பேசிய நாம் தமிழர் கட்சி பேச்சாளருக்கு அடி உதை!

Published

on

முடிந்தால் அடித்துப்பார் என மேடையில் சவால் விட்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஒருவரை திமுக தொண்டர் ஒருவர் மேடை ஏறி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூரில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. போலீசார் அனுமதி பெற்று நடந்த இந்த கூட்டத்தில் மேடையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஹிம்லர் என்பவர் மிகவும் ஆவேசமாக பேசினார்.

ஒரு கட்டத்தில் அவர் அரசையும், ஆட்சியையும் ஆட்சியாளர்களையும் அவதூறாக பேசிக்கொண்டிருந்தபோது திமுக தொண்டர் ஒருவர் அவதூறாக பேசாதே என்று கூறி வாக்குவாதம் செய்தார். உடனே நான் அப்படிதான் பேசுவேன், முடிந்தால் மேடை ஏறி என்னை அடித்துப்பார் என்று சவால் விட்டார்.

இதனை அடுத்து அந்த திமுக தொண்டர் மேடை ஏறி அங்கிருந்த நாற்காலியை எடுத்துப் போட்டு உடைத்து பேச்சாளரையும் அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து அங்கிருந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் பேச்சாளருக்கு ஹிம்லரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

காவல் துறை அனுமதியுடன் நடந்த ஒரு கூட்டத்தில் மேடை ஏறி தொண்டர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து காவல்துறையில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version