தமிழ்நாடு

நீட் ஆய்வுக் குழுவுக்கு எதிராக பாஜகவின் வழக்கு: பாஜகவை விளாசும் திமுக

Published

on

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து மருத்துவப் படிப்புகளுக்காக எழுதப்படும் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இப்படியான குழுவை அமைத்ததற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது மாநில பாஜக தரப்பு.

இந்நிலைநில் பாஜகவின் இந்த செயலுக்கு என்ன காரணம் என்பது குறித்து திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்து உள்ளார்.

அவர், ‘இந்த வழக்குத் தொடர்வதெல்லாம் இந்தப் பிரச்சனையைப் பெரிதாக்குவது தான் நோக்கம். ஓர் விவகாரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க மாநில அரசுக்கு உரிமை கிடையாதா. அதை செய்யக் கூடாது என்று கூறி பாஜக தரப்பில் வழக்குப் போட்டு உள்ளார்கள். இப்படிச் செய்வதன் மூலம் ஆய்வு செய்யும் குழுவின் செயல்பாடுகளைத் தடுத்து, முடிவெடுக்கும் விவகாரத்தைத் தள்ளிப் போட வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம்’ என்று தெரிவித்து உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version