தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அழைப்பு!

Published

on

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததில் இருந்து வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இதையடுத்து தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி, வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் தமிழக அரசியல் தளமே பரபரப்பாக உள்ளது.

இந்நிலையில், வரும் 13 ஆம் தேதி, 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்று அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் அறிவித்து உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

பட்ஜெட் தாக்கலாகும் அதே நாளில் தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version