தமிழ்நாடு

விருதுநகர் பாலியல் குற்றச்சாட்டு: திமுக உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்!

Published

on

விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கி திமுக உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

விருதுநகரில் இளம் பெண்ணை காதலிப்பது போல ஏமாற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்த திமுக உறுப்பினர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விருதுநகரில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திமுக உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை விட்டுள்ளார்

மேலும் விருதுநகர் பாலியல் வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்று தர முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாகவும் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டு இருப்பதாகவும் டிஎஸ்பி அர்ச்சனாவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வரும் 24ஆம் தேதி விருதுநகரில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்

மேலும் சிறுமிகள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தினமும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடாமல் இருப்பதை கண்டித்து இந்த போராட்டம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

 

seithichurul

Trending

Exit mobile version