தமிழ்நாடு
அரசு கஜானா நிதியை அதிமுகவினர் கையாள்வது ஏன்? ஸ்டாலின் கேள்வி
பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 அதிமுகவினர் விநியோகிப்பது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘கொரோனா ஊரடங்கில் மக்கள் தவித்த நேரத்தில் நிவாரண உதவி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அப்போது அந்தக் கோரிக்கையை முதல்வர் பழனிசாமி நிராகரித்து விட்டார். கொரோனா கால ஊழல் டெண்டர்களில் சுறுசுறுப்பாகவும் சுயநலத்துடனும் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 திட்டம் கொண்டு வந்துள்ளார். இது வரவேற்புக்கரியது தான். ானால், தேர்தலை மனிதில் வைத்து ஏதோ அதிமுக நிதியிலிருந்து வழங்கப்படுவது போல காட்டிக்கொள்ள முதல்வர் முயற்சிக்கிறார்.
தமிழகம் முழுவதும் அதிமுகவினரை வைத்து டோக்கன் விநியோகம் செய்கிறார் முதல்வர். இதனை முதல்வர் உடனடியாக தடுத்திட வேண்டும்’ இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.