தமிழ்நாடு

ஐடி ரெய்டு பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்: துரைமுருகன் ஆவேசம்

Published

on

ஐடி ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சுகிற இயக்கம் திமுக அல்ல என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திமுக பிரமுகர்கள் சிலர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகன் வீட்டிலும் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுகவினர்களை குறிவைத்து ஐடி ரெய்டு நடப்பதாக கூறப்படும் நிலையில் இந்த ஐடி ரெய்டு குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் பேட்டி கொடுத்துள்ளார். ஐடி ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சுகிற இயக்கம் திமுக அல்ல என்றும், ஐடி ரெய்டு மூலம் திமுகவை மிரட்டலாம் என மத்திய அரசு நினைத்தால் அதைவிட அரசியல் அப்பாவித்தனம் வேறு ஒன்றும் இல்லை என்றும் துரைமுருகன் கூறியுள்ளார். துரைமுருகனின் இந்த பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version