தமிழ்நாடு
இன்னும் இரண்டரை ஆண்டுகள்தான் திமுக ஆட்சி இருக்கும்: எடப்பாடி பழனிசாமி
இன்னும் இரண்டரை ஆண்டுகள் தான் திமுக ஆட்சி இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சேலத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியபோது, ‘இன்னும் இரண்டரை ஆண்டுகள் தான் திமுக ஆட்சி இருக்கும் என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் என பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார் என்றும், அதனை முதல்வர் முக ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அம்மா சிமெண்ட் விலையை ஏற்றி ’வலிமை’ சிமெண்ட் என்று கொடுக்கிறார்கள் என்றும் சிமெண்டாம், நாங்கள் என்ன வலிமை இல்லாத சிமெண்ட்டா கொடுத்தோம்? என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சேலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை என்றும், அதிமுக எவராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்றும், அதிமுகவின் தொண்டனை கூட எவராலும் தொடமுடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார்.
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் நடத்தி வரும் நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய போராட்டத்தின்போது இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தேனியில் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் விழுப்புரத்தில் சிவி சண்முகம் அவர்களும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.