தமிழ்நாடு
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சமீபத்தில் திமுக எம்பி கனிமொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் தற்போதுதான் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் துரைமுருகன் ஏற்கனவே இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பதும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையிலும் அவர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என அவரது கட்சியின் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.