தமிழ்நாடு

ஸ்டாலின் முதல்வரான பின் தான் சட்டசபை செல்வோம்: துரைமுருகன்

Published

on

தமிழக சட்டமன்றத்தில் இன்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு விதமான சலுகை அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பட்ஜெட் உரையை படிக்க விடாமல் திமுக உறுப்பினர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி கொண்டிருந்த நிலையில் ஒருகட்டத்தில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பட்ஜெட் தொடர் முழுவதும் திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தை புறக்கணிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் சற்றுமுன் பேட்டியளித்த நிலையில் ’வரும் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின் தான் மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம் என்றும் அதுவரையில் சபையை முழுவதுமாக புறக்கணிக்கிறோம் என்றும் தெரிவித்தார்

துரைமுருகனின் இந்த பேட்டிக்கு நெட்டிசன்கள் காமெடியான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version