தமிழ்நாடு
அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக முன்னணி: நகராட்சி, பேரூராட்சிகளில் மட்டுமே அதிமுக முன்னணி!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை முன்னிலையில் உள்ளன.
இதுவரை வந்த தகவலின் படி திமுக கூட்டணி 51 மாநகராட்சி வார்டுகளில் முன்னிலையில் உள்ளன என்பதும் அதிமுக 3 மாநகராட்சி வார்டுகளிலும் மற்றவை 2 மாநகராட்சி வார்டுகளில் முன்னிலையில் உள்ளன.
அதே போல் பேரூராட்சியில் 632 பேரூராட்சி வார்டுகளில் திமுகவும், அதிமுக 323 பேரூராட்சி வார்டுகளிலும் மற்றவை 117 பேரூராட்சி வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளன.
நகராட்சியை பொருத்தவரை திமுக 217 வார்டுகளிலும் அதிமுக 95 வார்டுகளிலும் மற்றவை 19 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள முன்னிலை தொடருமானால் திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.