தமிழ்நாடு
முதல்வர் மீதான ஊழல் வழக்கு மேல் முறையீடு.. கோவியட் மனு தாக்கல் செய்த திமுக!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முறைகேடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் முதல்வர் எடப்பாடிக்கும் அந்த முறைகேடுகளுக்கும் சமந்தம் இல்லை, அவர்கள் அவரது உறவினர்கள் ஆனால் இரத்த பந்தம் இல்லை என்று அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
அது மட்டும் இல்லாமல் உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்ப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
எனவே லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று திமுகச் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளனர்.