தமிழ்நாடு

சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Published

on

சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச திமுகவுக்குத் தகுதியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தலைமை ச் செயலகத்தில் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் 100வது பிறந்தநாள், மலரை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழகத்தில் தலைதூக்கியுள்ள துப்பாக்கிச் சூடு குறித்த, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் கருத்துக்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இருந்ததில்லை. திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் வீட்டில் ஆயுதக் கிடங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஒழுங்கு பெற்றி பேச திமுகவுக்குத் தகுதியில்லை. சூரப்பா குறித்த கேள்விக்கு, திமுக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி வருவதாகக் குற்றம்சாட்டி வருகிறது. துணை வேந்தர் மேல் அல்லது அரசு ஊழியர்கள் மேல் புகார்கள் இருந்தால் அதன் உண்மைத்தன்மை ஆராய வேண்டும் என்பதே விதி. அதன் அடிப்படையில் தான் தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

Trending

Exit mobile version