தமிழ்நாடு
பரபர திட்டம்.. செப். 8-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை: பல முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர். 8-ஆம் தேதி நடைபெறும்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும். இதில் கனிமொழிக்கு பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெறும். இது ஸ்டாலின் தலைவரான பின் நடக்கும் முதல் கூட்டம் ஆகும்.
இதில் அழகிரிக்கு நெருக்கமானவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்படு என்றும் கூறப்பட்டுள்ளது.