தமிழ்நாடு

முதல் ஆளாக களத்தில் குதித்த ஸ்டாலின்.. ஆக்சன் இன்னிங்ஸ் ஸ்டார்ட்.. வாங்க பாஸ்!

Published

on

சென்னை: மே மாதம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் இப்போதே மக்களை சந்தித்து பேசி வருகிறார்.

வருகின்ற மே மாதம் நாடு முழுக்க நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு, தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலும் முக்கியம்.

இந்த புத்தாண்டு தொடக்கத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலின், இதற்காக தயாராகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். கடந்த 3ம் தேதியே ஸ்டாலின் இதற்காக கிராம சபை கூட்டங்களை நடத்த தொடங்கிவிட்டார். ஏப்ரல் மாதம் வரை கிராமம் கிராமமாக சென்று ஸ்டாலின் மக்களை சந்தித்து பேச போகிறார்கள். ஏற்கனவே மூன்று கிராமங்களில் ஸ்டாலின் பேசிவிட்டார்.

திமுக சார்பில் 12,617 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டத்தை கூட்டி, அந்த கூட்டம் நடக்க வேண்டும் என்று ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இன்னும் சில நாட்களில் ஸ்டாலின் மட்டுமில்லாமல் திமுகவின் மற்ற முக்கிய தலைவர்களும் களத்தில் இறங்கி பேச போகிறார்கள். 3 கோடி பேரை சந்தித்து பேச இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Trending

Exit mobile version