தமிழ்நாடு

தலைகீழாக மாறியது வேலூர் நிலவரம்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை!

Published

on

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அதிமுக வேட்பாள ஏர் ஏசி சண்முகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். ஆனால் தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காலை 9 மணிக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் இருந்தார். ஆனால் 9.15 மணி முதல் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மீண்டும் முன்னிலை பெற்றார். தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகமே முன்னிலை வகித்து வந்ததால் திமுக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு சற்று மங்க ஆரம்பித்தது. இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாக 2000 முதல் 3000 என நீடித்து வந்ததால் யார் வெற்றிபெறுவார் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவி வந்தது.

வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

இதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகமே தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த நிலையில் தற்போது நிலவரம் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 11547 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 10 லட்சம் வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் இதுவரை 8 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன. இன்னும் 2 லட்சம் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இதில் தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 391579 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 380032 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 21419 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 11547 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version