தமிழ்நாடு

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் அறிவிப்பு!

Published

on

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கடைசியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

நேற்று இரவு திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் குறித்த உடன்பாடு கையெழுத்தானது.

இந்த உடன்பாட்டின்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம், கந்தர்வகோட்டை, திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர், கீழ்வேளூர் ஆகிய ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்று அல்லது நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டது என்பதும் அடுத்ததாக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை அந்த கட்சியின் கூட்டணியினர் ஆரம்பிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version