தமிழ்நாடு

புதுவையில் தொகுதி உடன்பாடு: ராகுல்காந்தியிடம் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்!

Published

on

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டது என்பதும் திமுக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தை போலவே புதுவையிலும் திமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிட உள்ளது. இதனை அடுத்து புதுவையில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது இந்த பேச்சுவார்த்தையில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என்பது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி திமுகவுக்கு 13 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகளும், கூட்டணி கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகளும்,ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் முக ஸ்டாலின் பேசி அதன் பின் தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் புதுவை தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தம் இன்னும் சில நிமிடங்களில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து தமிழகத்தைப் போலவே புதுவையிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version