தமிழ்நாடு
ஒரு வருட ஆட்சியை ஒரே டூரில் தவிடுபொடியாக்கிய அண்ணாமலை!
திமுகவின் ஒரு வருட ஆட்சியை ஒரே ஒரு இலங்கை டூரின் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவிடுபொடியாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
இலங்கை தமிழர்களின் பாதுகாவலர்கள் என்றால் திமுக தான் என்று பல ஆண்டுகளாக ஒரு செய்தியை கஷ்டப்பட்டு கட்டமைத்து வருகிறது. இலங்கை தமிழர்களுக்காக ஏகப்பட்ட விஷயங்கள் திமுக செய்துள்ளதாக காட்டி கொள்ளப்பட்டும் வருகிறது .
இதனால் கடும் அச்சமடைந்துள்ள திமுக உடனடியாக இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாயும் திமுக எம்எல்ஏக்கள் மட்டும் எம்பிக்கள் சார்பில் ஒரு மாத ஊதியத்தை அளிக்க முன்வந்துள்ளது.
ஆனால் அதற்கு முன்பே இலங்கைக்கு அண்ணாமலை சென்று பல நல்ல பெயரை பெற்று விட்டதாக கூறப்பட்டு வருவதால் திமுக தற்போது கலக்கத்தில் உள்ளது. திமுகவை பொருத்தவரை அதிமுக ஒரு பொருட்டே இல்லை என்ற நிலையில் பெரும் தலைவலியாக பாஜக இருந்து வருவது அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.