தமிழ்நாடு

ஒரு வருட ஆட்சியை ஒரே டூரில் தவிடுபொடியாக்கிய அண்ணாமலை!

Published

on

திமுகவின் ஒரு வருட ஆட்சியை ஒரே ஒரு இலங்கை டூரின் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவிடுபொடியாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இலங்கை தமிழர்களின் பாதுகாவலர்கள் என்றால் திமுக தான் என்று பல ஆண்டுகளாக ஒரு செய்தியை கஷ்டப்பட்டு கட்டமைத்து வருகிறது. இலங்கை தமிழர்களுக்காக ஏகப்பட்ட விஷயங்கள் திமுக செய்துள்ளதாக காட்டி கொள்ளப்பட்டும் வருகிறது .

இந்த நிலையில் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் திடீரென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு விசிட் செய்து அங்குள்ள மக்களையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து, இந்தியா செய்யக்கூடிய நிதி உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதனால் கடும் அச்சமடைந்துள்ள திமுக உடனடியாக இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாயும் திமுக எம்எல்ஏக்கள் மட்டும் எம்பிக்கள் சார்பில் ஒரு மாத ஊதியத்தை அளிக்க முன்வந்துள்ளது.

ஆனால் அதற்கு முன்பே இலங்கைக்கு அண்ணாமலை சென்று பல நல்ல பெயரை பெற்று விட்டதாக கூறப்பட்டு வருவதால் திமுக தற்போது கலக்கத்தில் உள்ளது. திமுகவை பொருத்தவரை அதிமுக ஒரு பொருட்டே இல்லை என்ற நிலையில் பெரும் தலைவலியாக பாஜக இருந்து வருவது அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version