தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்: விஜயகாந்த் அறிவிப்பு!

Published

on

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று காலை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் நீடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதனை அடுத்து அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும் தொகுதிகளையும் ஒரு உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக-தேமுதிக கூட்டணி முறிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version